பள்ளி முடிந்து "அம்மா ... " என்று கோவமாக கத்தியவாறு உள்ளே நுழைந்தான் பத்தாம் வகுப்பு படிக்கும் ராமையா . "என்ன டா ராமு நான் துணி துவைச்சுட்டு இருக்கேன் டா செல்லம் பின்னாடி வா ..." னு கத்தினாள் அவனது அம்மா ..
கோபத்தில் இருந்தவன் "இந்த கொஞ்சலுக்குளாம் குறைச்சல் இல்ல .. எனக்கு எவன் ராமையா னு பேரு வச்சான்? எல்லாரும் என்ன தாண்டுடா ராமா னு கிண்டல் பண்றாங்க ..."
"இது தான் கோவமா எல்லாம் உங்க அப்பா தான் டா காரணம்.... நான் கூட என் அப்பா பேரு அழகையா னு வைக்கலாம் னு சொன்னேன் உங்க அப்பாவும் , பாட்டியும் தான் கேக்கவே இல்ல... " என்றதும் அவனுக்கு கோபம் பல மடங்கு எகிரியது.
"அம்மா கடுப்ப கிளப்பாதமா .. அப்பா ஆஃபீஸ் ல இருந்து வந்தாச்சா ?"
"சரி பா நீ என் கிட்ட கோவ படாத உங்க அப்பா ஆஃபீஸ் ல இருந்து வந்த உடனே உங்க அப்பா கிட்டயே கேளு .. என்ன விட்டுடு .. "
அவனது அப்பா வெங்கடேஷ் அந்நியன் மாதிரி எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்லி நான் தான் யோக்கியன் எவனுக்கும் லஞ்சம் குடுக்க மாட்டேன் என்று சொல்லி திரிபவன். ஆனா உண்மையில் அவன் ஒரு மகா கஞ்சன். அரசு அலுவலகம் பக்கம் போகணும்னாலே அவனுக்கு பெரிய கஷ்டம்.
இரவு 8 மணி அப்பாவின் வண்டி சத்தம் கேட்டது. அவனது செருப்பை கூட கலட்ட விட வில்லை. "எனக்கு யாருப்பா ராமையா னு பேரு வச்சது? " என்று கோவம் கொஞ்சமும் குறையாமல் கேட்டான். அவனது அப்பா உங்க தாத்தா பேருடா .. ராசி யான பேரு.. உனக்கு இந்த பேரு வச்ச பின்னாடி தான் எனக்கு இந்த வேலை கிடைச்சுது.. நாம இந்த நிலைமைக்கு வந்தோம் .." என்று ஏதேதோ கூறி சமாதான படுத்த முயன்றான். ஆனால் அவனிடம் ஒரு பருப்பும் வேகல .. "ஒழுங்கா சொல்லு எனக்கு ஏன் இந்த பேர வச்ச???? "
சமாளிக்க முடியாமல் நடந்தததை கூற ஆரம்பித்தான். உங்க பாட்டி
தான் எல்லாத்துக்கும் காரணம். அவங்க நீ பிறக்கும் போது உயிரோட
தான் இருந்தாங்க. உனக்கு எங்க அப்பா பேர ஸ்டைல் லா சுருக்கி ரமேஷ் னு
தான் தா வச்சோம். ஒரு நாள் நாங்க யாருமே வீட்டில இல்ல .. ரேசன் கார்ட்
ல பேரு சேக்க வந்தாங்க .. உங்க பாட்டி வேற பழைய காலத்து ஆளா அவங்க
தாத்தா பெற சொல்ல மாட்டாங்க .. உன் பேர கேக்கும் போது தாத்தா பேரு னு
சொல்லிட்டாங்க .. வந்தவனும் பக்கத்துல உன் தாத்தா பேரு என்ன னு விசாரிச்சு ராமையா னு போட்டுட்டு போயிட்டான்.
கோபத்தில் இருந்தவன் "இந்த கொஞ்சலுக்குளாம் குறைச்சல் இல்ல .. எனக்கு எவன் ராமையா னு பேரு வச்சான்? எல்லாரும் என்ன தாண்டுடா ராமா னு கிண்டல் பண்றாங்க ..."
"இது தான் கோவமா எல்லாம் உங்க அப்பா தான் டா காரணம்.... நான் கூட என் அப்பா பேரு அழகையா னு வைக்கலாம் னு சொன்னேன் உங்க அப்பாவும் , பாட்டியும் தான் கேக்கவே இல்ல... " என்றதும் அவனுக்கு கோபம் பல மடங்கு எகிரியது.
"அம்மா கடுப்ப கிளப்பாதமா .. அப்பா ஆஃபீஸ் ல இருந்து வந்தாச்சா ?"
"சரி பா நீ என் கிட்ட கோவ படாத உங்க அப்பா ஆஃபீஸ் ல இருந்து வந்த உடனே உங்க அப்பா கிட்டயே கேளு .. என்ன விட்டுடு .. "
அவனது அப்பா வெங்கடேஷ் அந்நியன் மாதிரி எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்லி நான் தான் யோக்கியன் எவனுக்கும் லஞ்சம் குடுக்க மாட்டேன் என்று சொல்லி திரிபவன். ஆனா உண்மையில் அவன் ஒரு மகா கஞ்சன். அரசு அலுவலகம் பக்கம் போகணும்னாலே அவனுக்கு பெரிய கஷ்டம்.
இரவு 8 மணி அப்பாவின் வண்டி சத்தம் கேட்டது. அவனது செருப்பை கூட கலட்ட விட வில்லை. "எனக்கு யாருப்பா ராமையா னு பேரு வச்சது? " என்று கோவம் கொஞ்சமும் குறையாமல் கேட்டான். அவனது அப்பா உங்க தாத்தா பேருடா .. ராசி யான பேரு.. உனக்கு இந்த பேரு வச்ச பின்னாடி தான் எனக்கு இந்த வேலை கிடைச்சுது.. நாம இந்த நிலைமைக்கு வந்தோம் .." என்று ஏதேதோ கூறி சமாதான படுத்த முயன்றான். ஆனால் அவனிடம் ஒரு பருப்பும் வேகல .. "ஒழுங்கா சொல்லு எனக்கு ஏன் இந்த பேர வச்ச???? "
சமாளிக்க முடியாமல் நடந்தததை கூற ஆரம்பித்தான். உங்க பாட்டி
தான் எல்லாத்துக்கும் காரணம். அவங்க நீ பிறக்கும் போது உயிரோட
தான் இருந்தாங்க. உனக்கு எங்க அப்பா பேர ஸ்டைல் லா சுருக்கி ரமேஷ் னு
தான் தா வச்சோம். ஒரு நாள் நாங்க யாருமே வீட்டில இல்ல .. ரேசன் கார்ட்
ல பேரு சேக்க வந்தாங்க .. உங்க பாட்டி வேற பழைய காலத்து ஆளா அவங்க
தாத்தா பெற சொல்ல மாட்டாங்க .. உன் பேர கேக்கும் போது தாத்தா பேரு னு
சொல்லிட்டாங்க .. வந்தவனும் பக்கத்துல உன் தாத்தா பேரு என்ன னு விசாரிச்சு ராமையா னு போட்டுட்டு போயிட்டான்.
அதை பற்றி பெருசா எடுத்துக்காம நான் உனக்கு ஸ்கூல் ல ரமேஷ் னு தான் பேரு குடுத்து விட்டேன். நீ 5 வது படிக்கும் போது எதுக்கோ ரேஷன் கார்ட் கேட்டு விட்டாங்க .. அதுல வேற உன் பேரு ராமசாமி னு இருந்துசா.. ஸ்கூல் ல எப்படியாவது பேர மாத்திட்டு வாங்க னு சொன்னாங்க.. நானும் VAO ஆஃபீஸ் , RI ஆஃபீஸ் னு போனேன் .. எங்க போனாலும் என்னோட ஃபார்ம்ம கைல எடுத்தாங்களோ இல்லையோ கொடி காசு னு ஒரு உண்டியல் கைல தூக்கிடுறாங்க .. அவங்க பாசைல கொடி காசு நா என்ன தெரியுமா ? அரசு ஆஃபீஸ் ல லஞ்சத்துக்கு வச்சிருக்க பேரு அது. நம்ம நாட்டு கொடிய வச்சு பிச்சை எடுக்குறாங்க பாவிங்க .. நானும் காசு கொடுக்காம அங்க இங்க னு சுத்தி பாத்தேன் .. 1000 ரூ செலவு ஆகம பேரு மாறின மாதிரி தெரியல .. நேர உங்க HM கைல கால் ல விழுந்து உன் பெற ஸ்கூல் ஸர்டிஃபிகேட் ல மாதித்தேன்.. ஏதோ பள்ளி கூடம் கிரதால 50 ரூ ல பிரச்னை
முடிஞ்சு போச்சு .. பாத்தியா அப்பாவோட சாமர்த்தியம்" என்ற பூரிப்புடன் மகனை பார்த்தான்.. அவனது கோவதிற்கு அளவே இல்லாமல் போனது.. 50 ரூ ல நம்ம வாழ்க்கையவே இப்படி ஆச்சே..